Dr. Hugh Pyle
தண்ணீர் பிசாசு! யையீளூம் பேோஈத்தலூம்
“திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளி- பண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல” நீதிமொழிகள் 20:1.
“ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடூகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டூம்”” நீதிமொழிகள் 23:29-32.
“சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!” ஏசாயா 5:11
“சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்து வைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!” ஏசாயா 5:22,,23
“எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ! மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடூமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!” ஏசாயா 28:1
“ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்”” ஏசாயா 28:7.
இருபது வயதுடைய உயரமான பொன்னிற மேனியுடைய அவள் சனிக்கிழமையன்று ஒரு பெண் தோழியாக இருந்து கொண்டிருந்தாள். இறைச்சி வெட்டும் கத்தியைக் கொண்டூ வந்த மனிதன் அதன் எட்டு அங்குலங்களை எந்தவித விளக்கமுமின்றி மூன்று தடவைகள் அவளின் உடலிற்குள் செலுத்தினான். அதற்கு முன்னர் அண்மையிலுள்ள ஒரு சாராயக்கடையில் குடித்துக் கொண்டிருந்திருக்கிறான். அந்தப் பெண் மரித்துவிட்டாள் ஆயினும் அந்த மனிதன் அதிகாலை இரண்டூ மணிக்கு கைது செய்யப்படும் வரை பிலதெல்பியா எனும் இடத்திலுள்ள சாராயக்கடையில் தொடர்ந்தும் குடித்துக் கொண்டிருந்தான்.
வான்குடை மிதவையினால் கீழ் இறங்குவதிற்கு பயிற்சி பெற்ற இராணுவ படையில் உயர் அதிகாரியாக கடமையில் இருந்த, இருபத்து மூன்று வயதுடைய, கிளம்சன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட ஒருவர் குடிப்பதிற்கு விரும்பாதவராக இருந்தார். ஆயினும் அவரின் பதவியுயர்வை உறுதிப்படுத்தும் ஒரு வைபவத்தில் வொட்கா எனும் ஒருவகை மதுவைக் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். பதினேழு அவுன்ஸ் வொட்கா மதுவை பருகியதால் அவர் வடக்கு கரோலினாவில் தனது வாந்தியிலே மூழ்கிப்போனார்.
ரென்னிஸ்ஸி எனும் இடத்தில், இரவு முழுவதும் குடிவெறியாட்டத்தில் இருந்து கோபத்துடன் வீட்டிற்கு வந்த ஒரு விவசாயி, நான்குபேரைக் கொலை செய்தார், அதில் அவரின் இரண்டூ ஆண் பிள்ளைகளும் அவரின் தாயாரும் அடங்குகின்றனர். பின்னர் அவரும் அவரின் தோழர்களும் குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியதால் படூகாயத்திற்குள்ளாகி மரித்தனர்.
இந்த சம்பவங்கள் அண்மையில் வெளியாகிய செய்தித்தாள்களின் முதற்பக்கத்தில் காணப்படுகின்றன. ஆயினும் இவை முழு உலகிலும் இன்று சாதாரணமாக நடைபெறுகின்றன!
சில நாட்களுக்கு முன்பு மியாமி எனும் இடத்திற்கு அருகில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இரத்த வெள்ளத்தில், கறைபடிந்த பேரழிவில், ஒரு வாகனத்திற்குள் பைபிள் ஒன்று காணப்பட்டது, ஆயினும் அழிவுக்கு காரணமாக இருந்த மற்றைய வாகனத்திற்குள் திறக்கப்பட்ட விஸ்க்கி போத்தல்
இருந்தது. அதன் விளைவாகவே பைபிளுக்கும் போத்தலுக்கும் இடையேயான போராட்டம் பெரும் பேச்சாக உருவானது!
தேவன் கூறுவது, “திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.” இதற்கு எதிரான தேவனின் வாக்குறுதியைப் பாருங்கள்,
“உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்் சங்கீதம் 84:11.
“தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ!” (ஆபகூக் 2:15) என தேவன் கூறுகின்றார். இங்கே மறுபடியும் போத்தல் 1தீமோத்தேயு 6:17ல் கூறுவதிற்கு முரணாக இருக்கிறது. “நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடூக்கிறவர் ஜீவனுள்ள தேவனே!”
“வெறியர் தேவனுடைய இராஜஷ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” கொரிந்தியர் 6:10. பவுல் மதுபாவனைக்கு எதிராக பேசினார். தனது சொந்த ஆடுகளைக் குறித்து இயேசு கூறுகையில், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்றார்.
விளம்பரங்கள் குடி என்கின்றன. தொலைக்காட்சிகள் குடி என்கின்றன. துன்மார்க்கமான உலக நண்பர்கள் இதனைக் குடி என்கின்றனர்! நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
வியற்னாம் போரின்போது “இருதயம் உடைக்கும் மலை” என ஒரு யுத்தம் அழைக்கப்பட்டது. ஆயினும் இன்றைய சமுதாயத்தில் இருக்கும் போராட்டமானது இருதயமுடைவதிலும் அதிகமானதாக துன்பத்திலும், மரணத்திலும் இருக்கின்றது. உண்மையில், மக்கள் போத்தலுடன் போராடூவது “இருதயம் உடைக்கும் மலை” இலக்கம் ஒன்று எனலாம்!
உலகம் குடி என்கின்றது - ஆயினும் தேவன் என்ன கூறுகின்றார்? துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ள
வேண்டாம் (எபேசியர் 5:18) என பவுல் கூறுகின்றார்.
“உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்”” (லூக்கா 21:34) என இயேசு கூறினார்.
“மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்” (நீதிமொழிகள் 23:31) என சாலமோன் கூறினார். பார்க்கக்கூட வேண்டாம்!
எமது தேசத்தை அத்திவாரத்துடன் பேர்த்தெடூப்பதிற்கு ஒரு முதலை கட்டவிழ்க்கப்பட்டூள்ளது, எமது சமுதாயம் இணைப்புடன் கழருகின்றது, எமது வீடுகள் வேதனையையும் துக்கத்தையும் கொதிக்க வைக்கும் கேத்தில்கள் ஆகின்றன, எமது நெடுஞ்சாலைகள் மக்களைக் கொலை செய்யும் கூண்டுகளாகக் காணப்படுகின்றன! தண்ணீர் பிசாசு!
இதனை நியாயப்படூத்துவதிற்கு எதுவுமே முற்றிலுமாக இல்லை.
கிறிஸ்து தண்ணீரை வைனாக மாற்றினார் எனக் கூறுகின்றார்கள். அவர் நிச்சயமாக புளிக்க வைத்த மதுபானத்தை உருவாக்கவில்லை. அவர் அழுகிய எதையும் உருவாக்கவில்லை. வேதாகமத்தில் சரியான சொற்பிரயோகமாக வைன் என்பது தூய்மையான திராட்சைப் பழத்தின் இரசத்தைக் குறிப்பிடுகின்றது. மதுபானம் அருந்த வேண்டாம் என வேதாகமத்திற்கூடாக மக்களை ஊக்குவிக்கும் இரட்சகர் நிச்சயமாக தனது சொந்த வார்த்தைக்கு முரண்பாடாக ஒன்றை உருவாக்கி மக்களுக்கு கொடுத்து தான் இரட்சிக்க வந்த மக்களைக் கெடுத்திருக்க மாட்டார்! மதுபானத்தை நல்ல மருந்தாகப் பாவிக்கலாம் எனக் கூறுகின்றார்கள், ஆயினும் கெளரவமான வைத்தியர்கள் அவ்வாறு அதனை சிபாரிசு செய்யமாட்டார்கள். இது பொருளாதாரத்திற்கு அவசியமானது என்கின்றார்கள், இதனால் வரும் ஆதாயத்திலும் பார்க்க மதுபான பாவனையின் அழிவைச் சீர்ப்படூத்துவதிற்கு அதிக மில்லியன் செலவிடப்படுவதாக இறைவரி திணைக்களம் நிரூபிக்கின்றது!
பிசாசு ஒரு “பாம்பைப்” போலவும் “சர்ப்பத்தைப்” போலவும் வருகின்றது (வெளி 12:9). அது ஒரு சிங்கத்தைப் போலவும் வருகின்றது (1பேதுரு 5:8). அவன் ஒரு ஒளியின் தூதனின் வேஷத்திலும் வருகின்றான் (கொரிந்தியர் 11:14). அவன் இடுக்கண் செய்கிறவனாக வருகிறான் (ஏசாயா 51:13). ஒரு ஏமாற்றுக்காரன் (வெளி 12:9). அவன் ஒரு பாவ மனுஷனாக - மிருகமாக வருகின்றான்; ஆயினும் ஒருபோதுமில்லாதவாறு அவன் இப்போது தண்ணீர் வடிவிலே வந்துள்ளான் என்றே கூறவேண்டியுள்ளது!
தண்ணீர் பிசாசு. பியர், வைன், ஜின், வொட்கா, ம்றம், விஸக்கி, கள்ளு, சாராயம், கசிப்பு அல்லது போதை ஊட்டும் எதுவாக இருப்பினும் - நீ ஒரு தண்ணீர் பிசாசு!
நல்ல அறிவுள்ள எவருமே இந்த சிரமத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். “மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள்;” நீதிமொழிகள் 14:9. (நல்ல மரம் கெட்ட கனி கொடுக்காது).
தண்ணீர் பிசாசு மானிட வாழ்க்கையில் ஏற்படூத்திய சீரழிவைப் போன்று பைபிள் ஏற்படுத்தியுள்ளது என ஒருபோதும் கூறமுடியாது! “தண்ணீர் பிசாசு என ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள் கண்ணீர் வடிக்கின்றன, சட்டசபைகள் நிரூபிக்கின்றன, போதைக்கு ஆளானவர் உடைந்த இருதயத்துடன் இருக்கின்றார்!
எது இதனை ஏற்படூத்துகின்றது - பைபிளா அல்லது
போத்தலா? நீர் இரண்டிற்கும் நடுவில் இருக்க முடியாது. “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ
அழியும்” சங்கீதம் 1:6. இந்தப் போத்தல் - பிசாசு கொண்டுவருவது: 1. குரும்பத்தீற்கு கரந்துண்பம் ஆதியாகமம் 9ல், “அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்
படூத்திருந்தான்.”” இதுவே வேதாகமத்தில் முதல் தடவையாக வெறிக்கும் பானத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டூுள்ளது. இது ஒரு திறமையான மனிதனை வெறிக்க வைத்துள்ளது. இது அவமானத்தையும் நிர்வாணத்தையும் கொண்டூ வந்துள்ளது. இது ஒரு துன்மார்க்கமான நிகழ்வையும் பெரிய அழிவையும் கொண்டு வந்ததோடு ஒரு குடூம்பத்தின் மீது சாபத்தையும் வரவழைத்துள்ளது! இது எப்பொழுதுமே இதையே செய்கின்றது!
குடிப்பது உடைந்த இருதயங்களுக்கு காரணமாக இருக்கின்றது! எத்தனை தடவைகள் உடைந்த இருதயத்துடனும் கண்ணீருடனும் எனது அலுவலகத்திற்கு மக்கள் வந்துள்ளார்கள், ஒவ்வொரு தடவைகளிலும் அவர்கள் உரையாடலை ஆரம்பிக்கும் போது, “எனது கணவன் குடிப்பவராக இருக்கிறார்” என்று ஆரம்பிக்கிறார்கள்.
எமது ஞாயிறு பாடசாலையில் சில சிறுபிள்ளைகள் கூறுவதை குறிப்பிடக் கடினமாகவுள்ளது, “எனது தந்தை பியருக்காக எவ்வளவு பணத்தை கடந்தவாரம் செலவழித்தார் என்று தெரியுமா?” என ஒரு சிறுவன் கேட்டான். (இந்த சிறுவர்களுக்கு ஒழுங்கான உடுப்புகள் இல்லை, நடைமுறை வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய எந்தவொரு நலனும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை “தந்தை குடிக்கின்றார்!””).
மற்றொரு பிள்ளை “எனது தந்தைக்காக ஜெபியுங்கள் -
அவர் கடந்த இராத்திரியில் மிகவும் வெறித்திருந்தார்” என அண்மையில் கூறினான். தண்ணீர் பிசாசு!
குடி விருந்து வைபவத்திற்கு தகப்பனும் தாயும் சென்றிருக்கும் போது, வீட்டில் இருந்த பிள்ளைகள் மூவர் தீ விபத்தில் மரித்துள்ளார்கள். மதுபானத்தின் மீதான இச்சை தமது சொந்தப் பிள்ளைகள் மரிப்பதிற்கு காரணமாக இருந்தது என்பதை இந்தப் பெற்றோர்கள் தமது வாழ்க்கையின் மிகுதி நாட்களிலும் நித்தியத்திலும் நினைவில் வைத்திருக்கவே வேண்டும்!
ஒரு நீதிமன்றத்தில் தனது கணவனை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதியின் முன்பாக நின்ற பெண்ணைப் பற்றிய கதை உண்டு. அந்தப் பெண்ணின் பரிதாபமான முகம் ஒருவாறு
நீதிபதியின் மனதைத் தொட்டூ விட்டது, அதனால் அவர் அவளை நோக்கி, “நான் கவலைப்படுகின்றேன், ஆயினும் நான் உனது கணவனை சிறையில் அடைக்க வேண்டியுள்ளது” என்றார். “உம்மை கெளரவிக்கிறேன்” என்ற பெண், “நீர் சாரயக்கடைகளை அடைத்துவிட்டு, எனது கணவனை வேலைக்கு அனுப்பினால் அது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நன்றாக இருக்காதா?” எனக் கேட்டாள்.
“குற்றவாளிகள் பிறப்பதில்லை, அவர்கள் வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள்” என ஜே. எட்ஜர் ஹுவர் என்பவர் யோசனையாகக் கூறியுள்ளார். தந்ைத சாராயக்கடைக்குள் தொட்டியை நிரப்புகையில் வெளியில் பிள்ளைகள் பாலுக்காக பிச்சை எடுப்பதை காணும்போது அல்லது மது குடித்த கணவன் கொடுத்த அடி தழும்புகளுடன் சபை ஆராதனையில் கண்ணீர் விடும் மனைவியை காணும்போது நாம் இதனை நம்பமுடியும். உயர் கல்வி கற்கும்போது என்னுடன் உயிரியல் வகுப்பில் இருந்த வாலிபனை ஞாபகம் இருக்கின்றது. அவன் பெண்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தான், சொந்தமாக கார் ஒன்றையும் வைத்திருந்தான். பாவத்திலும் சகல போட்டிகளிலும் வெற்றிபெறுபவனுமாக இருந்தான். அவன் சில வருடங்களின் பின்னர் ஊட்டச்சத்தின்மையாலும் மதுபான பாவனையினாலும் மரணத்தருவாயில் அவனின் வீட்டில் இருந்தான். இதே காரணத்தினால் அவனின் மனைவி அவனுக்கு அருகில் மரித்துக்கிடந்தாள். நாற்றம் நிறைந்த கேவலமான வீட்டிற்குள் மேசையில் பழுதடைந்த உணவு அழுகிக் கொண்டிருந்தது. ஆம், இந்த வன்மையான பானம் குடும்பத்திற்கு கடூம் துன்பத்தைக் கொண்டூ வருகின்றது.
காவுசர் என்பவர் 1340ம் ஆண்டில், “மதுபானம் உள்ளே வரும்போது நற்குணமும் வெட்கமும் வெளியே செல்கின்றது” எனக் கூறியுள்ளார். சேர் வில்பேர்ட் கிறேன்பெல் என்பவர், “மற்றைய தனிக் காரணிகளிலும் பார்க்க மதுபானம் அதிகமான உயிர்களை அழித்துள்ளது, அதிகமான பிள்ளைகளை பட்டினியில்
வைத்துள்ளது, அதிகமான பெண்களைக் கொலை செய்துள்ளது” என்றார்.
மனிதர்கள் மதுபானத்தைப் பருகுகின்றார்கள் எனக் கூறுகின்றனர் - ஆனால் உண்மையில் மதுபானம் மக்களைப் பருகுகின்றது! சாலமோன் கூறியது, “துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்”” நீதிமொழிகள் 5:22
மானிட இருதயத்திலே மிகவும் கேவலமான கெட்ட பெயரெடூத்த மதுபானத்திற்கு இடங்கொடூப்பது ஆபத்தானதாகும். உண்மையில் மனிதன் இதற்கு இடங்கொடுக்கையில் “தண்ணீர் பிசாசு” அவனை பிறருக்கும் தீமை விளைவிக்கத்தக்க ஒழுக்கக் கேட்டிற்குள் கொண்டூ செல்கின்றது!
போத்தல் பிசாசு மேலும் கொடுப்பது: 2. வாழ்க்கையில் ஒழுங்கின்மை
“திராட்சரசம் பரியாசஞ செய்யும் , மதுபானம்
அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல” நீதிமொழிகள் 20:1.
மறுபடியும் நீதிமொழிகள் 23ம் அதிகாரத்தில் பார்ப்பீர்களானால், குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தாக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும் (21). மதுபானம் வேதனை, துக்கம், சண்டை, புலம்பல், காயங்கள், கண்ணீர்களைக் கொண்டு வருகின்றது என்பதைக் காணலாம் (நீதிமொழிகள் 23:29). இறுதியில் இந்த மதுபானம் பாம்பைப்போல் கரிக்கும் விரியனைப்போல் தீண்டூம் (32); அவன் அந்நிய பெண்களுடன் தொடர்பு கொள்ளுகின்றான், சரியான சிந்தனையில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளாத அலுவல்களில் பங்கு கொள்ளுகின்றான். அவன் வருத்தத்துடன் எழுந்திருக்கின்றான், அடிகளை வாங்கினான் ஆனால் அது எவ்வாறு நடைபெற்றது என்பதை
அறியாதிருக்கிறான். ஆயினும் “அதனை தொடர்ந்து தேடிச் செல்கின்றான்” (நீதி 23:35).
இந்த தண்ணீர் பிசாசுக்கு முகங்கொடுக்க நீர் ஆயத்தமாகவா இருக்கிறீர்?
ரெம்பா எனும் இடத்தில் என்னுடன் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் ஒரு ஞாயிறு மாலை நேரம் திரையரங்கில் இருந்து வெளியே வந்தார்கள். மதுபான காட்சிகளுக்கு பிரபல்யமான பழைய ஹொலிவூட் திரைப்படம் அவர்களுக்கு சாட்சிபகர்ந்திருக்க வேண்டும். இரவில் வந்து கொண்டூ இருக்கையில் அவர்களின் வாகனம் ஒரு நடைபாதையின் ஓரத்தில் நின்ற அழகிய சிறுமியை மிகவேகமாகத் தாக்கிச் சென்றது. வளைந்த முன்பாகங்களுடனும் உடைந்த முன் விளக்குடனும் சிறுபெண் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து இரத்தத்தைப் பூசிச் சென்ற வாகனத்தை சிறிது தூரத்திற்குள்ேளேயே காவல் துறையினர் கைது செய்தனர். உடைந்த முன்விளக்குடனும் இரத்தக்கறையுடனும் சிறுபெண்னின் மரணத்தில் மனிதப்படுகொலைக்கான தண்டனையுடனும் எல்லாரும் கைவிட்ட நிலையில் அந்த வாலிபர்கள் தனித்து நிற்கும் படங்களை இந்நாள் வரைக்கும் நான் வைத்திருக்கின்றேன். இது தண்ணீர் பிசாசுக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும்!
எனது சபையிலுள்ள ஒரு வர்த்தக மனிதன் அண்மையில் அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சாராயக்கடையைக் காண்பித்து, “அதில் எந்தவொரு திருப்தியும் இல்லை எனும் ஒரு விடயம் நிச்சயமானது.” என்றார். பாவத்திற்குள்ளானவர்கள் தமது வெறியின் மத்தியிலும் வெறுப்புடன் அங்கிருந்து வெளியேறுவதை அவர் கண்டூள்ளார். குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த மதுவை உட்கொள்ளும் “மனிதர்கள் மேம்பாடுள்ளவர்கள்'” என எமக்குக் கூறப்படுகின்றது. ஆயினும் ஆபிரகாம் லிங்கன், “மதுவில் எவ்வித பாதுகாப்புமில்லை. உலகம் பயனடைகின்றதோ அல்லவோ, முற்றிலுமாகவும் இறுதியாகவும் எல்லாவித மதுபானத்தையும் நாடூகடத்தவேண்டுூம், அகற்றவேண்டும் என்பது உண்மையானது” என்றார். சேக்ஸ்பியர் என்பவர், “ஆம், வைன்னின் கண்களால் காணமுடியாத ஆவியே, உன்னை அறிந்து கொள்வதிற்கு உனக்கு ஒரு பெயர்
15?
இல்லாவிடின், நாம் உன்னை பிசாசு என அழைக்கவிடூ!” என்றார்
எவ்வளவு கேவலமான ஒழுங்கின்மையை வாழ்க்கைக்கு மதுபானம் கொண்டுூவருகின்றது. மனித உடலுக்கு பாரதூரமான தாக்கங்களை மதுபானம் கொண்டூ வருகின்றது என்பதை
அதிகமான மக்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு கணிப்பீட்டை நியுயோர்க் ரைம்ஸ் கடந்த வருடத்தில் செயற்படுத்தியது, இருப்பினும் இது சிலரால் புறக்கணிக்கப்படுகின்றது. சாதாரண நிலையிலும் பார்க்க அதிகமான இரத்த அழுத்தத்திற்கும், குடற்புண்களுக்கும், ஈரலில் ஏற்படும் ஈரலிப்பு நோய்க்கும் மதுபானம் காரணமாக இருக்கிறது. இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க வைத்தியர்களினால் அமெரிக்க வைத்தியர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டூள்ளது. உயர் இரத்தழுத்தம், அல்சர், ஈரலின் ஈரலிப்பு நோய் போன்றவற்றின் இந்த விளக்கமும் கணிப்பீடும் உண்மையிலேயே திகைப்பூட்டுகின்றது. அத்துடன் அந்த அறிக்கை இருதய நோய், சிறுநீரக அழற்சி (கிட்னி வியாதிகள்), காசநோய், மார்புச்சளி நோய் (மூச்சடைப்பு), நீரிழிவு, கீழ்வாதநோய், நரம்புநோய் போன்ற வியாதிகளும் இந்த மதுபான பாவனையுள்ள கூட்டத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
மதுபானம் குற்றம்புரியவைக்கிறது, எமது தேசத்தின் சிறைச்சாலைகள் மதுபான பாவனையின் பின்னர் குற்றம்புரிந்தவர்களை அடைத்துள்ளது. பென்ஸகோலா எனும் இடத்தில் ஒரு இளம் பெண் போதையில் இருத்தல், கெட்ட வார்த்தைகள் பாவித்தல், சபித்தல், ஒழுக்கக்கேடான தொடர்பு கொள்ளுதல், கைது செய்வதை எதிர்த்தல் போன்றவற்றிற்காக கைது செய்யப்பட்டூள்ளார். இந்த எல்லாக் குற்றங்களுக்கும் காரணமாக இருந்த மதுபானத்தை அவள் கைது செய்யப்பட்ட பென்ஸகோலா மதுசாலையில் அவள் அருந்தியிருந்தாள்.
மதுபானம் அதிகமான நேரத்தைக் கொள்ளையாடூகின்றது. வெறிப்பதிற்கு நேரமெடுக்கிறது - பின்னர் நேரத்தை வெறி எடூக்கிறது. அதிகமான மனிதர்கள் குடியினால் தமது சமநிலையையும் தைரியத்தையும் இழந்தமையால் வேலை செய்யும் அதிகமான நேரத்தை இழந்துள்ளனர். குடிப்பழக்கம் முற்றிலும் வீண்செலவை உண்டாக்குகின்றது. வேலை செய்யும் மணித்தியாலயங்கள் வீணாகின்றது. பணம் வீண் செலவாகிறது - மில்லியன் கணக்கான ரூபாய்கள் வீணாகியுள்ளன. குடிகாரர்கள் ஏற்படுத்திய குற்றங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாய்களை நீதிமன்றங்கள் செலவிடுகின்றன, அதிலும் அதிகமான
மில்லியன்களை குடூம்பங்களையும் சிறுவர்களையும் புனரமைப் பதிற்காகச் செலவிடப்படுகின்றன.
குடியினால் ஏற்படும் பிரச்சனைகளினாலும் விபத்து - களினாலும் வாகனங்களுக்கான காப்புறுதி விகிதம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பிரதான வீதிகளில் ஏற்படும் 53000 மரணத்தில் கிட்டத்தட்ட அரைவாசியில், அதிகளவிலானவை மதுபானம் பங்கு கொண்டுள்ளது என தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு முகவர் நிலையம் குறிப்பிட்டூள்ளது. மிகவும் அதிர்ச்சி கொடூக்கத்தக்க வகையில் 25000 இறந்த உடல்களை எடுத்துள்ளார்கள், இந்த மரணத்திற்கு பியர், விஸ்க்கி, வைன் என்பன காரணமாக இருந்துள்ளன. இந்தக் கணிப்பீடுகள் ஒவ்வொன்றையும் உங்கள் தலை தொடக்கம் கால் வரைக்கும் அடூக்கி வையுங்கள். நீங்கள் வாழும் நகரங்களில் இருந்து பிரதான வீதிகளில் செல்கையில் சிதைந்து மரணித்த உடல்களைக் காணக்கூடியதாகவே இருக்கும். இந்த மரணங்களில் அதிகமானவற்றிற்கு மதுபானத்துடன் தொடர்பு இருக்கும்!
வியற்னாமில் நடைபெற்ற யுத்தத்திலும் பார்க்க அதிகமான மரணத்தையும் உடைந்த குடும்பங்களையும் மதுபானம் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் இருபது பில்லியன் டாலர்கள் அமெரிக்காவில் மதுபானத்தினால் செலவழிவதாக கூறப்பட்டுள்ளது. பாதை ஓரங்களிலும் நடை பாதைகளிலும் செல்பவர்கள் கூட அச்சத்துடனேயே பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த அழிவுகளுக்கும் செலவுகளுக்கும் - முழுக் காரணமும் முதல் தடவையாக “புத்துணர்ச்சியூட்டும்” என நினைத்து அருந்திய பியரேயாகும்!
3. நற்குணத்தீற்கு பேரழ்வு
“சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!” ஏசாயா 5:11 “ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர்
கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை'” என 12ம் வசனம் கூறுகின்றது. மதுபானம் நற்குணத்திற்கு அழிவை ஏற்படுூத்துகின்றது, இதனால் மனிதர் களின் வழிகள் மாறுபட்டவையாகின்றது. “தமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா 5:20). இதனால் மனிதர்கள் “தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறார்கள்” (5:21). “சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருக்கிறார்கள்'” (5:22). அவர்கள் விரும்பி நாடுகின்ற பானம் அவர்களை மாற்றமுடியாத கெட்ட பெயருடைய வெறிகாரர்களாக மாற்றிவிடுகின்றது; ஆகையால் அவர்கள் விரைவிலேயே “அறிவில்லாமையினால் சிறைப்பட்டூப் போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டூபோகிறார்கள்” (5:13). “அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்'” (ஏசாயா 5:14). எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ! மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடூமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே! (ஏசாயா 28:1) எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும் (ஏசாயா 28:3).
“ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால்மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்'” என ஏசாயா 28:7 கூறுகின்றது. ஒரு மனிதன் மறுபடியும் பிறக்காவிட்டால், அவன் எவ்வளவுதான் சமயவாதியாக இருந்தாலும் மதுபானத்திற்கு
அடிமையாகிவிடூகின்றான் எனக் கூறுகின்றது.
இந்த வார்த்தைக்கு உதாரணமாக லேக் ஓறியன், மிசிகன் எனுமிடத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க குருமார்கள் இருக்கிறார்கள். இங்கே 418 குருமார்கள் இந்த “வாடி வீட்டிற்கு” உள்ளே சென்றுள்ளார்கள். எவ்வளவுதான் மதபோதனையில் வளர்த்தும், செலவழித்துக் கற்பித்தும், பயிற்சிகள் வழங்கியும் இந்த மதுபானத்தின் சோதனையில் தன்னைத்தான் நம்ப முடியாமல் தோற்றுப்போயுள்ளார்கள்!
மதுபானம் மற்றும் மற்றைய போதை பொருட்களினால் வரும் பிரச்சனைகள் குறித்த படிப்பு கூறுவது, குடிப்பதினால் வரும் பிரச்சனைகள் விருத்தியடைவதைத் தவிர்ப்பதிற்காக குடூம்பமாகக் குடிப்பதை ஊக்குவிப்பது ஒரு தேசிய கொள்கையாக்க வேண்டும் என்கிறது. இந்த அறிக்கைக்கு “மதுபானப் பிரச்சனைகள் - தேசத்திற்கான ஒரு அறிக்கை” என தலையங்கம் கொடுக்கப்பட்டூுள்ளது. மதுபானத்தை வாங்கிக் குடிப்பதிற்கான வயதெல்லையை பதினெட்டூ வயதிற்கு நாடூ பூராகவும் குறைக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கை சிபாரிசு செய்துள்ளது. ஒரு “பூரணமான மதுபானத் திட்டம்” வழங்கிய புது செயற்திட்டத்திற்கு சபைகளுக்கான தேசிய சங்கம் ஆதரவு கொடுத்துள்ளது. இதற்கூடாக “அமெரிக்கர்களின் குடிக்கும் முறையில் மாற்றத்தை” இலக்காக வைத்துள்ளது!
சிலாட்ஸ்ரோன் என்பவர் 1898ல் கூறியதுபோல ஞானமான தொணிகள் இன்று எமக்குத் தேவைப்படுகின்றன, “வறுமையும் கொள்ளை நோயும் பலி எடூத்ததிலும் பார்க்க அதிகமானோரை குடிப்பழக்கம் பலி எடூத்துள்ளது.”
ஏசாயா 28:8ல், “போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும்
அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை” என சாப்பிடும் இடத்தை தீர்க்கதரிசி வருணிக்கின்றார்.
கடலுணவை விரும்பும் அனைவரது கவனத்தையும் கவரத்தக்க நவீன முறையில் ஒரு கடலுணவு விடூதி அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அதனை விளம்பரப்படுத்துவதிற்காக
அவர்கள் பாவித்த சொற்களுக்குள் “தூய்மையானது” என்பதும் காணப்பட்டது - ஆயினும் அங்கு எல்லா இடங்களிலும் மதுபானத்திற்கான அடையாளங்களும் இருந்தன! மதுபானம் (பியர்) குடிப்ப தினால் வரும் நாசத்தையும், பாழாக்கும் தன்மையையும் அவர்கள் எடூக்கும் அருவருப்பான வாந்தியையும் அறிந்த ஒருவர் பியர் குடிக்கும் இடத்தை “தூய்மையானது” எனக் குறிப்பிடமாட்டார்!
யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக ஒரு நல்ல உதாரணமாக வாழவேண்டியிருந்தது. அவரைக்குறித்து
தேவதூதன் கூறியது, “அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்” (லூக்கா 1:15) என்பதாகும். அவர் நற்குணத்தை உடைய மனிதராக வாழ்ந்தார். ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் மதுபானம் குடிக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல.
குடிக்கும் ஒரு மனிதனின் குணம் இருக்க வேண்டிய விதமாக இல்லாதது போலவே அவனின் மூளையும் இருக்க வேண்டிய விதமாக இருக்கமாட்டாது. இருபத்தைந்து வயதில் மரிக்கும் ஒரு குடிகாரனின் மூளையானது எழுபத்தைந்து வயதுடைய ஒரு மனதனின் மூளையைப் போன்று குறைபாட்டுடன் காணப்படும் என ஒரு மருத்துவ அறிக்கை அண்மையில் குறிப்பிட்டூள்ளது!
4. தேசத்தற்கு அழ்வு
நாம் தண்ணீர் பிசாசின் சேற்றுப் பாதையை பின்பற்றிப்போகும் போது தேவன் எமக்கு ஞாபகப்படூத்துவது, “நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி” நீதிமொழிகள் 14:34 என்பதாகும்.
இன்றைய சமுதாயம் பழுதடைந்துள்ளது. பட்டணங்கள் கறையில் ஊறிப்போயுள்ளன, மதுபானம் கொடூத்து வாக்குகள் வாங்கப்படுகின்றன, பதவியுயர்வுகள் மதுவினால் கிடைக்கின்றன, இரகசியங்கள் மதுபானத்தினால் வெளிப்படுத்தப்படுகின்றன.
இதனால் திருமணங்கள் சிதறடிக்கப்படுகின்றன. தண்ணீர் பிசாசு!
யோவேல் தீர்க்கதரிசி எழுதியது, “வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது. எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டூ” (யோவேல்1:5,6).
“அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிற வனுக்கு ஐயோ என்றும் அது எந்தமட்டூம் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக் கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்” (ஆபகூக் 2:5,6).
“தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ!” (ஆபகூக் 2:15) என மதுபான பாவனையை ஊக்குவித்து கொடூப்பவருக்கு அல்லது விற்பவருக்கு எதிராக கூறப்பட்டுள்ளது.
“கொலை செய்யாதிருப்பாயாக” என பத்துக்கட்டளை வற்புறுத்திக் கூறுகின்றது. பிளாஸ்ரிக் பைகளின் பாவனையினால் ஒரு வருடத்தில் நாற்பது குழந்தைகள் கொல்லப்படூகிறார்கள் என்ற உண்மையை அறிந்தவுடன் அதிகமான மக்கள் அதைத் தடுப்பதிற்கு ஒன்றிணைந்தார்கள், அதே நேரத்தில் ஆயிரமாயிரம் மக்கள் பியர், வைன், விஸ்க்கியினால் இறக்கின்றார்கள், அமெரிக்காவின் பிரதான வீதிகளில் மாத்திரம் 25000க்கும் அதிகமானவர்கள் ஒரு வருடத்தில் இறக்கின்றார்கள்!
“பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான்” (தானியேல் 5:1). மதுபானம் குடிக்கும் விருந்தும், நடனமும், விக்கிரக ஆராதனையும் பாபிலோனிய விருந்து வைபவத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது, இந்த அத்தியாயம் முடிவதிற்குள்ளாக நியாயத்தீர்ப்பு இராஜாவைப் பற்றிக் கொண்டது, மேதியர் - பெர்சியரின் இராணுவங்கள் பட்டணத்திற்குள் வந்தன, அரண்மனை நிலத்தில் கணுக்கால் உயரத்திற்கு இரத்தம் ஓடியது என உலக சரித்திரம் எமக்குக் கூறுகின்றது. பாபிலோனியர்களின் அதிகாரம் நீக்கப்பட்டது, “அன்று இராத்திரியிேலே கல்தேயரின் இராஜாவாகிய பெல்ஷாத்சார் கொல்லப்பட்டார்!” (வசனம் 30). குடிக்கும் தனிநபரை அல்லது தேசத்தை மதுபானம் எப்பொழுதும் அழிவுக்குள்ளாக்குகிறது.
5. இருதமயத்தீற்கு ஏமாற்றம்
“வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்” (ஓசியா 4:11). இதயம் இல்லை என்ற சொல் அடிக்கடி குடிக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணை குறிப்பிடூவதிற்குப் பயன்பட்டுள்ளது. மதுபானமும் இச்சையும் ஒன்றாகச் செல்கின்றன. வெறியும் துர்நடத்தையும் இணைபிரியாத இரட்டையர்கள். கற்பிழத்தலும் திடீர்த்தாக்குதல்களும் குடித்தலைப் பின்தொடரு கின்றன. மதுபானம் இருதயத்தை எடூத்து விட்டதினால் ஒருபோதும் அவ்வாறானதை சிந்திக்காத மனிதர்களினால் சிறு குழந்தைகள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள்! குடியின் மயக்கத்தில் இருந்து தாம் செய்த குற்றங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் வேதனைப்பட்டு அழுகின்ற பெரியவர்களை நான் கண்டுள்ளேன். இந்த மக்கள் தவறிழைக்கப்பட்ட மக்களை எப்பொழுதும் நேசித்தவர்கள், ஆயினும் மதுபானத்தின் மயக்கத்தினால் இருதயத்தை இழந்து, தாம் நேசித்த மக்களையே துன்பத்திற்குள்ளாக்கியுள்ளார்கள். “பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமள தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற் போகிறார்கள். ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்;.....” (ஆமோஸ் 6:6,7).
ஆம், இருதயங்கள் உடைக்கப்பட்டு, கனவுகள் கலைந்துபோய், அமைத்திருந்த நல்ல திட்டங்கள் யாவும் மதுபான பாத்திரத்தில் கரைந்துவிட்டன என்பதை புத்திதெளிந்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள்! “இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டூம் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம்.”” (ரோமர் 13:12,13).
“நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்ட வனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது”” (1 கொரிந்தியர் 5:11). அவ்வாறே நாம் வெறியர்களோடூ கூட்டுறவு வைக்கக் கூடாது! தனிமையும், வேறுபிரிக்கப்பட்ட நிலையும் ஏமாற்றமும் குடிப்பதினால் இருதயத்திற்கு உண்டாகும்.
6. ஆண்மாவற்கும் சறிறத்திற்கும் மரணம்
“தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டூம், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால், அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடூவிலிருந்து விலக்கிப்போடவேண்டூம்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டூப் பயப்படுவார்கள்” (உபாகமம் 21:18 - 21).
1இராஜாக்கள் 20:16ல், பெனாதாத்து என்ற பெயருடைய ஒரு சீரிய நாட்டு இராஜாவும் அவனுக்கு உதவியாக மற்றைய முப்பத்திரண்டு இராஜாக்களும் குடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இராஜரீதியான குடியாட்டம் பெனாதாத்தின் இராணுவம் தோற்றுப்போக காரணமாயிற்று. பின்னர் பெனாதாத்தும் கைப்பற்றப்பட்டு கேவலமாகக் கொல்லப்பட்டான். அவ்வாறே குடிபோதை எப்போதும் ஆனமாவிற்கும் சரீரத்திற்குமான மரணத்தைக் கொண்டுூவருகின்றது.
மற்றொரு நகரத்திலுள்ள எமது ஞாயிறு பாடசாலைக்கு வருகைதந்திருந்த ஒரு வாலிபப் பெண்ணிடம் இருந்து வந்த பயங்கரமான தொலைபேசி அழைப்பு எனக்கு ஞாபகம் இருக்கின்றது. தகப்பனிடத்தில் குடிப்பழக்கம் இருப்பதினால் அவரின் கண்களில்படாதபடி அவரை நேசிப்பவர்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை அன்று அவர் கண்டுூபிடித்து விட்டார். அது ஒரு ஞாயிறு மத்தியான வேளை, அவர்களின் வீட்டு வரவேற்பறையில் தகப்பனார் அந்தத் துப்பாக்கியை தனது தலையில் வைத்து விசையிழுப்பை அழுத்தி வெடிக்கச் செய்துவிட்டார். அவரின் இரத்தமும் மூளையும் தளபாடங்களிலும், சுவர்களிலும், கதவுகளிலும் ஒட்டிக்கொண்டிருந்தன. அவரின் மனைவியையும் பிள்ளைகளையும் ஆறுதல்படுத்தவேண்டியது எனது துக்கமான கடமையாக இருந்தது, அத்துடன் இந்த தண்ணீர் பிசாசினால் பாதிக்கப்பட்டவரின் மரண இறுதிக்கிரியைகளையும் செய்யவேண்டியிருந்தது!
மதுபானத்தினால் பத்தாயிரம் பேர்கள் கொல்லப்படூம் போது, பைத்தியமான நாய் கடித்து ஒருவர் இறக்கின்றார் என கணிப்பீடு கூறுகின்றது. நாம் நாயைக் கொலை செய்கின்றோம், மதுபானத்திற்கு அனுமதி கொடுக்கின்றோம்! இது ஆச்சரியமாக இல்லை! மதுபானம் பயங்கரமான நலிவுபடூத்தும் நோயை சரீரத்தில் ஏற்படுத்துவதுபோலவே ஆன்மாவிலும் ஏற்படுத்து கின்றது. “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்ப தில்லை என்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க் கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொரு ளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை'” (1 கொரி 6:9,10).
வெறியர்கள் அவர்களின் வெறியில் இருந்து மீட்கப்பட்டாலொழிய அவர்கள் தேவனுடைய பரலோகத்திற்குச் செல்லமாட்டார்கள். ஒவ்வொரு வெறிகாரனும் ஒருநாள் ஒரு வைபவத்தில் மாத்திரம் குடிப்பவராக இருந்தார், ஒவ்வொரு வைபவத்தில் குடிப்பவனும் ஆற்றலுடன் குடிப்பவனாகிவிட்டான்! குடிகாரனை முற்றிலுமாக மதுபானத்தைவிட்டு விடுபட வைப்பது மிகவும் கடினமானது.
ஆரம்பகால எகிப்திய கல்லறைகளில் பின்வரும் வாக்கியம் காணப்பட்டது: “இவரின் பூமிக்குரிய கூடாரம் பியரினாலும் வைன்னினாலும் மூடப்பட்டது, அத்துடன் அழைக்கப்படூவதிற்கு முன்னர் இவரின் ஆவி பிரிந்துவிட்டது”
நான் மறுபடியும் கூறுகிறேன், மனிதர்கள் மதுவைக் குடிக்கிறார்கள். ஆனால் உண்மையில் மது அவர்களைக் குடிக்கின்றது! மதுபானத்தை நாம் வெற்றிகொள்ள வேண்டூம் என வேதாகமம் கூறுகின்றது. “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமா யிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், 'வெறிகள், களியாட்டூகள்' முதலானவைகளே; இப்படிப்பட்ட வைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்ப தில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்” (கலாத்தியர் 5:19-21).
இராஜாவாகிய லேமுவேல் நல்ல ஆலோசனையை பெற்றுக் கொண்டார், நாம் அதனை நீதிமொழிகள் 31:4,5ல் காணலாம். “திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டூவார்கள்.” இது கிறிஸ்துவுக்கு முன் எழுநூறில் உண்மையாக இருந்தது போலவே இப்பொழுதும் இருக்கின்றது!
மதுபானம் குறித்த விளம்பரங்களும் காட்சிகளும் இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உள்ள ஆபத்தாக இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் திரும்பும்போது ஒரு வழமையான காரியம்போன்று யாரோ ஒருவர் குடித்துக் கொண்டிருக்கிறார் அல்லது குடிப்பதிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இது ஒவ்வொரு சிறுவர்களின் மனதிலும் பெரியவர்களின் மனதிலும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. முதலில் பெற்றோர்கள் மனந்திரும்பாவிட்டால் அது பிள்ளைகளில் மிகவும் ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும்.!
சரீர மரணத்தைக் குறித்துப் பேசுகையில், கடந்த வருடத்தில் நடைபெற்ற 53000 வீதி மரணங்களில் கிட்டத்தட்ட அரைப் பங்கிற்கு மதுபானத்துடன் தொடர்பு இருந்துள்ளது என தேசிய பிரதான வீதிப் பாதுகாப்புச் சபை அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மற்றைய அறிக்கைகள் அரைவாசிக்கும் மேற்பட்ட வீதி அழிவுகள் மதுபானத்தினால் ஏற்படுவதாகக் குறிப்பிடுகின்றன.
ஒரு அரசினர் வளாகத்தினுள் பியர் எழுபது ரூபாவிற்கும் கொக்கக் கோலா நூறு ரூபாவிற்கும் விற்கப்பட்டதை குறிப்பிடத்தக்க ஒரு அமைச்சர் கண்டுூபிடித்துள்ளார். மதுபானத்தின் பிடியில் இருந்து மனிதர்கள் விடுபடூவதிற்கு போராடூகையில் அவர்களுடன் கேளிக்கையான விளையாட்டை நடத்துகின்றார்கள்!
யுத்தங்களின் அழிவுகளையும் நாசங்களையும் நாம் சிந்தித்துப் பார்க்கையில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணம் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றது. ஆயினும் உண்மையில் அதிலும் பார்க்க அதிகமான மக்கள் மதுபானத்தினால் மரித்துள்ளார்கள்!
ஐக்கிய அமெரிக்காவில் மதுபானம் மூன்றாவது இலக்க கொலையாளியாகும்! மதுபானம் வாழ்க்கைக் காலத்தைக் குறைக்கின்றது. குடிக்கும் மக்களிடத்தில் இறக்கும் தன்மை மூன்றுமடங்கு அதிகமாகவுள்ளது.
மதுபானம் மக்களைக் கொலை செய்கின்றது என்பதைக் காட்டுவதிற்கு ஐக்கிய அமெரிக்காவின் செய்தித் தாள்களில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்ட உதாரணங்கள்:
புதூற வரூடத்தன்றூ மபொன்ற்றாக்கில் பெண்களின் முறணம், இரு வால்பற்கண் சிறையில் அடைப்ப (பொன்ரியாக், மிச்சிகன்).
வீருந்தீற்குப்பண் அடித்தூவட்ரு - நீறூத்தாமற் சென்றார் சாரதி, இருவற் மரணம். (ஒரு வாலிபன் புதுவருடத்தன்று அடுத்தடுத்து இரண்டு விருந்து வைபவங்களில் தொடர்ச்சியாக குடித்து விட்டுச் சென்றுள்ளார்.)டெற்றொய்ற் பனப்படலத்தில் பெண்களை மநணீக்கவீட்டதை வால்பன் ஒத்துக் கொண்டார் (டெற்றொய்ற்). இன்று இருபது வயது வாலிபன் ஒருவர் சரணடைந்து, புது வருடத்தன்று அழகான இரண்டு பெண்களை தனது கார் மோதியதாகவும் பனிப்படலத்தில் அவர்களை மரணத்தருவாயில் விட்டுச் சென்றதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்களைக் கொலை செய்வதிற்கு முன்னர் அந்த வாலிபன் பியர் விருந்திற்குச் சென்று குடித்துள்ளார்.
தந்தையிடம் இன்கலன், க௱த்தீரூந்த மகண் மறணம் (ஸ்ரரிஸ்வில், வட கரோலினா). பகிரங்கமாகக் குடித்ததின் காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தையின் சட்டைப் பையினுள் கடமையான நீரிழிவு வியாதியுடைய இருபத்திரண்டு வயதுடைய மகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய இன்சுலின் மருந்து, மகள் வீட்டில் மரணம்.
தகப்பனைக் கெ௱லை செய்ததை ச௪௱ந்தமான வால்பன் ஒத்துக் கொண்ருண்ளாண் (ப.'.பெல்லோ, நியூயோர்க்). பதினாறு வயதுடைய ஒரு வாலிபன் கைத்துப்பாக்கியினால் தனது தகப்பனைக் கொலை செய்ததிற்காக கைது செய்யப்பட்டு, நாட்டுப்புறச் சிறையில் அடைக்கப்பட்டூள்ளார். இவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார். இவர் தான் தனது தந்தையைக் கொலை செய்வதிற்கு முன்னர் அதிகளவிலான பியர்களை குடித்ததாக கென்மோர் பொலிசாரிடம் ஒத்துக் கொண்டூள்ளார்.
பெண் கானல் தூறை அதீகாறமைக் கொலை செறங்ததை படைவீரர் ஒத்துக் கொண்டாற் (சான் ரபீல், கலிபோர்னியா). இராணுவ காவல்துறை அதிகாரி ,32 வயது,
அழகான பெண் இராணுவ அதிகாரி மூச்சுத்திணற வைத்துக் கொலை செய்ததை 111யிடம் ஒத்துக் கொண்டூ அறிவிக்கப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டூள்ளார். இவர் அதிகளவிலான மதுபானம் குடித்திருந்ததாக அறிக்கை கூறுகின்றது.
ய்ண்னைகளையும், மனைவமைபரம் தந்தை கத்தியால் குத்தக் கொலை (சன்ரா ரோசா, புலொரிடா). இரண்டூ பிள்ளைகளுடைய கோபங்கொண்ட தந்தை தனது மூன்று வயது மகனைக் கடுமையாக கத்தியால் குத்திவிட்டு, ஐந்து வயது மகளுடன் ஓடூவதிற்கு முயற்சித்த தனது மனைவியையும் கத்தியால் குத்தியுள்ளார். தான் ஒரு வாரத்திற்கும் மேலாக அதிகமாகக் குடித்துக் கொண்டிருந்ததாகவும், தான் அவ்வாறு செய்திருக்காவிட்டால் இவ்வாறான தவறு நடந்திருக்காது எனவும் அவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார். வெட்டும் போதும் அவர் குடித்திருந்தார் என கைது செய்த அலுவலகர் கூறினார்.
குடிவீருந்து மறணத்தில் நீறைவுற்றது (வினோனா, மின்னேசோரா). வாலிபப் பெண்களையும் ஆண்களையும் உள்ளடக்கிய இரவு முழுவதுமாகக் குடிக்கும் விருந்து மரணத்துடன் முடிவடைந்தது.
மூவற் மதூயான நீலையத்தீல் கொல்லப்பட்ருண்ணணழ் (கெளஸ்ரன், ரெக்ஸஸ்). மதுபான அறையில் நடைபெற்ற வாக்குவாதத்தினால் சனிக்கிழமை இரவு அந்த அறை துப்பாக்கிச் சூட்டுப் புகையினால் நிறைந்தது, மூவர் நிலத்தில் கிடந்தனர்.
மீரா டென்றெொ௱னைச் சேற்ந்த மனீதண் மனைவீமைக் கொண்றதீற்காக ஆருண் தண்டனை (பிராடொன்ரன்,புலோரிடா)
, என்பவர் தனது மனைவியை கூரான சுத்தியலால் அடித்துக் கொன்றதிற்காக, கடந்த திங்கட்கிழமை சிறையில் அடைக்கத் தீர்ப்பளிக்கப்பட்டது. “நான் அவளை நேசித்தேன், அவளும் என்னை நேசித்தாள் என்பது எனக்குத் தெரியும்” என அவன் கூறினான். அவனும் மனைவியும் போதையில் இருந்த போது ஆரம்பித்த விவாதம் மரணத்திற்கு காரணமாகியுள்ளது.
மூனைவீறிண் மீதூ மதூப௱னம் ஊற்றுப் பற்றவைத்தஈழ் (எல் பாசோ, ரெக்ஸஸ்). 2ம் வகுப்பு விமானப் பணியாளர் ,
தூக்கத்தில் இருந்த தனது மனைவியின் மீது குவளையில் இருந்த மதுவை ஊற்றி தனது கையில் இருந்த சிகரட் லைட்டரால், எரிய வைத்துள்ளார். “ “நான் ஏன் இதனைச் செய்தேன் என எனக்குத் தெரியாது” எனக் கூறிய அவர், “நான் போதையில் இருந்தேன். சரியான மனநிலையில் உள்ள ஒருவர் இவ்வாறான ஒன்றைச் செய்யமாட்டார்” என்றார்.
இவை ஒவ்வொன்றும் மதுபானத்தினால் அமெரிக்காவில் நடைபெற்ற பயத்தை ஏற்படுத்தும் உதாரணங்களாகும். அங்கு மாத்திரமல்ல எமது நாட்டிலும் “தண்ணீர் பிசாசு” இவற்றை நடப்பிக்கின்றது!
கிறிஸ்தவர்கள் இந்தப் பிசாசிற்கு என்ன செய்யலாம்? இவற்றைக்
குறித்துச் சிந்தித்துப் பாருங்கள்:
1. இதில் இருந்து விலத்தியிருங்கள். ஒருபோதும் இதனைத் தொடாதேயுங்கள்!
2. உங்கள் பிள்ளைகளை இளம்பிராயத்தில் இருந்தே மதுபானத்தை வெறுக்கவும் நிராகரிக்கவும் கற்பியுங்கள். தொலைக்காட்சியிலோ அல்லது விளம்பரங்களிலோ மதுபானம் குடிப்ப து ஒரு வழமையான விடயம் போன்று வரும்போது அதனைப் பாராதபடிக்குப் பழக்குவியுங்கள்.
3. உங்களுக்குத் தேவையான பொருட்களையோ அலலது மருந்துகளையோ மதுபானம் விற்காத இடத்தில் வாங்குவதிற்கு பழகிக் கொள்ளுங்கள். கூடுமானவரை மதுபானம் விற்கப்படாத, குடிக்காத உணவகத்திலே சாப்பிடுங்கள்.
4, ஏன் நீங்கள் அங்கே பொருட்களை வாங்குவதில்லை அல்லது உணவு உட்கொள்வதில்லை என்பதை உரிமையாளருக்கு எழுத்து மூலம் அல்லது தொலைபேசி மூலம் தெரிவியுங்கள்.
5. மதுவிற்கு எதிராக நிற்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். 6. மற்றவர்களை கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்யுங்கள்! 7. உறுதியான கொள்கையை விட்டூக் கொடுக்காத சபைக்கு
ஆதரவு கொடுங்கள்.
நீங்கள் இதுவரையில் இரட்சிக்கப்படவில்லையானால், இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்:
7. தண்ணீர் பீசாசு நீத்தயத்தற்கும் அழ்வை ஏற்பருத்தூகிறது
மத்தேயு 24:49-51ல் தீமையான மனிதன் கர்த்தரின் வருகை தாமதமாக இருக்கிறது என நினைத்து “தன் உடன் வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” எனக் கூறுகின்றது.
“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7) என தேவன் கூறுகின்றார். ஆகவே இருளிலும் மதுபானத்தின் ஒழுக்கக் கேட்டிலும் வாழ்வது தேவனுடன் ஐக்கியப்பட வைக்க மாட்டாது! “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 3:3) என இயேசுகூறியுள்ளார்.
“வெறியர் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்ப தில்லை'” என தேவன் ஏற்கனவே கூறியது போல வேதாகமத்தின் இறுதிப் புத்தகத்திலும் பயப்படத்தக்க எச்சரிப்பைக் கொடுத்துள்ளார். “ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப் படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்” (வெளி 20:15).
ஆயினும் இங்கே ஒரு நற்செய்தி காணப்படூகின்றது! பாவியான ஒருவர் போத்தலுக்குள் தேடும் எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் கண்டூ கொள்ளலாம்!
1 ஒருவர் அனலாக இருப்பதை விரும்புகின்றாரா? இதனை எமது இரட்சகரில் காணலாம்.
டரய8 றவர்! மு மா. பப 16 ஹார்! காவலர் - 5 2010 மளாரார்55101 1௦ 178081871௦ ௨0 1201௦0410௦ ஐங0 501௦137 1௦ 11016 [$ ௨451 ]சிர்றர்தார்௦ ௦151ம் 1௨16௨ 11௦850 8௦ 101 0௦037 6 (0நார்ஜஹ்ர் 1973 நர 5௦ம் ௦111௦ 10ம் 1201151075 151314 0-87398-509-5
வாழ்க்கையை மாற்றும் சிறு புத்தகத் தொடர்கள்
, த
நிலைத்து நிற்கும் கனி
எல்லாரும் பாவம் செய்தவர்கள்
தேவனின் சித்தத்தை எப்படி அறிந்து கொள்வது
அந்த முக்கியமான இரத்தத்தைப் பற்றிய செய்தி
அடிப்படை வேதாகம உண்மைகள்
இப்பொழுது நீங்கள் ஒரு புதியவர்
உதவிகள் புதிய விசுவாசிகளுக்கு
கிறிஸ்தவர்களுக்குத் தீர்மானிப்பதில் சந்தேகமான காரியங்கள் எரிகின்ற நரகம்
தேவனின் முன்பாக ஒரு நாள் நீங்களும் நானும் நிற்கும்படி வரும் பரலோகத்திற்கான ரோமரின் பாதை
கத்தோலிக்கர்களுக்கான மரியாளின் கட்டளை
சிுக்களுக்கு பப்டிஸம் கொருப்பது குறீத்து வேதாகமம் என்ன கூறுகிறது உமது பிரேதப் பெட்டி தயாராகிவிட்டதா?
நீர் நினைப்பதைப் பார்க்கிலும் தாமதமாகி விட்டீர்
அந்த மன்னிக்கப்பட முடியாத பாவம்
அந்த அன்னாசிக் கதை
வி௬வாசத்தின் உடன்படிக்கைகள்
அந்தப் பாஹைக் குழப்பம்
ஜெபம் பதிலளிக்கப்பருவதற்கான நிபந்தனைகள்
எப்படிச் செல்வது பரலோகம்
பரலோகமா அல்லது நரகமா உமக்கானது எது? வித்தியாசத்தின் ஒரு அட்டவணை
இரட்சிக்கப்பருவதற்கு நான் என்ன செய்ய வேணிரும்? இரட்சிப்பு தெளிவானதும் சாதாரணமானதும் ஆகும் பெண்ணன் பங்கு
அந்த காரணம் ஏன்
புகையிலை பாவிப்பது பாவமா?
ஆத்தும ஆதாயம் செய்பாமைக்கான சாட்ருப்போக்குகள்
3, த
3, த
சே த
3, த
3, த
, த
3, த
3, க
3, த
, த
3, த
3, த
, த
3, த
3, த
ம, த
3, த
, த
சே த
, த
3, த
ம், த
3, த
3, த
, த
ட்ட 4 ட
மேலதிக விபரர்களுக்கும் புத்தகங்களுக்கும் எழுத வேண்டிய எமது முகவரி: கொட்டகலை பைபிள் பப்டிஸ்ற் சபை, இல. 6/1 வனிகசேகர புரம், ரொசிட்டா நகரம், கொட்டகலை, ஸ்ரீ லங்கா.
2 ஒருவர் நண்பர்களைத் தேடூகின்றாரா? உண்மையான
கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். “பாவ சஞ்சலத்தைப் போக்க பிராண சிநேகிதன் உண்டே!”
3 ஒருவர் ஏதாவதொன்றில் இருந்து தப்பித்துக் கொள்வதிற்காக முயற்சிக்கின்றாரா? அப்படியாயின் அவர் கிறிஸ்துவுக்குள் ஆச்சரியமான ஒரு புதிய வாழ்வைக் கண்டூ கொள்ள முடியும் “நங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்௧ளா யிருப்பீர்கள்” (யோவான் 13:17).
4 ஒருவர் தைரியத்தை விரும்புகின்றாரா? அப்படியாயின் அவர் “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டூ” (பிலிப்பியர் 4:13) என கூறிய பவுலிடத்தில் இருந்து கிறிஸ்துவைக் கற்றுக் கொள்ள முடியும்.
5 ஒருவர் குடிப்பதினால் சந்தோஷத்தைத் தேடூவாராயின், உண்மையாக கிறிஸ்துவுக்கு தனது வாழ்க்கையை ஒப்புவித்தவர்களிடத்தில் இருந்து கண்டூகொள்ளட்டுூம். “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்”” (சங்கீதம் 84:11) என்ற வாக்குறுதியை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
உண்மையான நன்மையை எது வழங்குகின்றது - போத்தலா அல்லது வேதாகமமா?
அண்மையில் அலாபாமா என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் நான் உரையாற்றுகையில், ஒரு மனிதன் இரண்டூ சந்தர்ப்பங்களில் ஜெபிக்கும்படிக்கு தனது கரத்தை உயர்த்திக் காண்பித்தார், பின்னர் சபையை விட்டு வெளியேறினார். மூன்றாவது தடவை சமுகமளித்தபோது அவர் தனது குத்துணர்வினை இழந்திருப்ப தாகக் காணப்பட்டது. அந்த மனிதன் குடிக்கும் பெற்றோருடன் வீட்டில் வளர்க்கப்பட்டார் என்பதை நான் அறிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு குடிகார சகோதரன் அவரின் வீட்டில் நெருப்பு வைத்துக் கொல்லப்பட்டூள்ளார். மற்றொரு வெறிகார சகோதரன் விபத்தில் மரித்துள்ளார்.